கிண்ணியா பிரதேசத்தில் தனிமைப் படுத்தப் பட்ட 12 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் பொது மக்களுக்கு அத்தியவசிய உணவுப் பொருட்கள் எவ்வாறு வழங்கப்படுகின்றன அவற்றை தங்கு தடையின்றி விநியகிப்பதற்கு கிராம சேவகர், கிராம அபிவிருத்தி சங்கம் மற்றும் மீனவ சங்கம் ஊடாக வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக கிண்ணியா பிரேதச செயலாளர் எம்.எச்.முகம்மது கனி குறிப்பிட்டார்.
றகுமானியா நகர் கிராம உத்தியோகத்தர் பிரிவு அலுவலகத்திற்கு இன்று( 17) நேரடி விஜயம் செய்து தனிமைப் படுத்தப் பட்ட பொது மக்களுக்கு அத்தியவசிய தேவைகளை செய்து கொடுக்குமாறு கிராம உத்தியோகத்தரிடம் பணிப்புரை விடுத்தார்.
வீடுகளில் தனிமைப் படுத்தப் பட்டுள்ள பொதுமக்கள் வீதிகளுக்கு வெளியே சென்றால் அதற்கு பாதுகாப்பு தரப்பினர் சட்ட நடவடிக்கை எடுப்பர்.எனவே பொது மக்கள் சுகாதார நடமுறைகளை பேணி வீடுகளில் இருக்குமாறு அவர் மேலும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment