பண்டாரவளை நகர பொதுச்சந்தை காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது



க.கிஷாந்தன்-
ண்டாரவளை நகர பொதுச்சந்தை இன்று (09.05.2021) முதல் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியில் சுகாதார அதிகாரிகளும், பொலிஸாரும் தொடர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.
கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக இவ்வாறு சந்தை மூடப்பட்டிருந்தாலும் இன்று காலை சில வியாபாரிகள், அத்துமீறி விற்பனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து பண்டாரவளை மாநகர சபை, பிரதேச செயலக சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பண்டாரவளை பொலிஸார் இணைந்து அவர்களை திரும்பியனுப்பினர்.
வெல்லவாய, ஹப்புத்தளை பகுதிகளைச் சேர்ந்த சில்லறை வியாபாரிகளே இவ்வாறு திருப்பி அனுப்பட்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :