சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் தீ : தீயணைப்பு வீரர்களின் போராட்டத்தில் கட்டுப்பாட்டுக்குள் வந்தது தீ !!



நூருல் ஹுதா உமர்-
ம்மாந்துறை பிரதேச செயலக நிதிப்பிரிவில் இன்று பகல் திடீரென தீப்பற்றி கொண்டதனால் ஆவணங்கள் பலதும் தீக்கிரையானது. பிரதேச செயலக கணக்காளர் ஐ.எல்.எம்.பாரிஸ் பதில் கடமைக்காக வேறு இடத்திற்கு இன்று விஜயம் செய்திருந்த நிலையிலையே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகிறது. மின்குளிரூட்டியில் ஏற்பட்ட மின்கசிவின் காரணமாக இந்த அனர்த்தம் ஏற்பட்டிருக்கலாம் என சம்மாந்துறை பிரதேச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீப்பிடித்த தகவலறிந்த கல்முனை மாநகர தீயணைப்பு படை, மற்றும் சம்மாந்துறை பிரதேச சபை என்பன துரிதகதியில் களமிறங்கி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததுடன் பாரிய சேதங்களிலிருந்தும் சம்மாந்துறை பிரதேச செயலகத்தையும், சுற்றுப்புற சூழலையும் பாதுகாத்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :