பாராளுமன்ற உறுப்பினர்கள் ரிசாத் பதியுதீன், பிரேமலால் ஜயசேகர: சபை அமர்வுகளில் பங்கேற்க சபாநாயகர் அனுமதி



பாராளுமன்ற உறுப்பினர்களான ரிசாத் பதியுதீன் மற்றும் பிரேமலால் ஜெயசேகர ஆகியோர் விரும்பினால் அவர்களை பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அனுமதி அளித்துள்ளார்.
பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. பாராளுமன்றம் இன்று 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை 3 நாட்களுக்கு கூட உள்ளது.
இதன்படி பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் சபை அமர்வுகளுக்கு வர விரும்பினால் அவரை அழைத்து வருவதற்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளரை கேட்டுள்ளார்.

அதேபோல் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர சபைக்கு வர விரும்பினால் அவரை அழைத்து வருவதற்கான வசதிகளை செய்து கொடுக்குமாறு படைக்கள சேவிதர் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தை கேட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :