ஜூன் முதல் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு

காரைதீவு சகா-

நாட்டில் இயங்கும் பதிவுசெய்யப்பட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கு நிரந்தர மாதாந்த கொடுப்பனவொன்றை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பதிவு செய்யப்பட்ட பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கு 2இ500 ரூபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பீ.பி ஜயசுந்தர நிதி அமைச்சின் செயலாளர் எஸ்இஆர். ஆட்டிகலவுக்கு அது தொடர்பில் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
அதற்கான நிதி மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி ஆரம்ப பாடசாலை ஆரம்ப கல்வி பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் கல்விச்சேவை இராஜாங்க அமைச்சுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் நிதி அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதியின் செயலாளர் அறிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :