இலங்கையில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஸைனொபார்ம் தடுப்பூசி சிறந்தது



லங்கையில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஸைனொபார்ம் தடுப்பூசியை வழங்குவது சிறந்தது என மகப்பேற்று மற்றும் பெண்ணோயியல் மருத்துவர்கள் (VOG) நிறுவனத்தினால் சுகாதார அமைச்சுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், கர்ப்பிணித் தாய்மார்களுக்கு, ஏனையவர்களுக்குப் போன்று தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி போடக்கூடாது என்றும், இதற்காக விசேட வழிமுறையொன்று முன்மொழியப்பட்டுள்ளதாகவும் கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மகப்பேற்று (VOG) பெண்ணோயியல் மருத்துவர்கள் நிறுவனத்தின் செயலாளர் வைத்தியர் சாமிந்த மாதொட்ட தெரிவித்தார்.
அத்துடன், கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலையின் மகப்பேற்று (VOG) பெண்ணோயியல் வைத்தியர் மயுரமாண தெவலகேயும் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டார்.

இங்கு அவர் கருத்து தெரிவிக்கையில், கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு நியூமோனியா நிலைக்கு தள்ளப்படுகின்ற கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக இலங்கையில் ஒரு சிகிச்சை நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :