சம்மாந்துறையில் மேலும் ஒரு தொகுதியினருக்கு நாபீர் பௌண்டேஷனின் உலருணவு!



க்களின் காலடிக்குச் சென்று பல்வேறு உதவிகளை தேவையுடையோருக்கு பலவருடங்களாக செய்து வரும் நாபீர் பௌண்டேஷன்; இவ்வருட றமழானை முன்னிட்டு பல்வேறு குழுக்களுக்கும் உலருணவு பொதிகளை வழங்கிவருகின்றது.அந்த அடிப்படையில்  சம்மாந்துறையில் மேலும் ஒரு தொகுதியினருக்கு உலருணவு பொதிகளை வழங்கும் நிகழ்வுகள் அண்மையில் இடம்பெற்று.
நாபீர் பௌண்டேஷனின் நிறுவுனரும் சம்மாந்துறையில் அமைந்துள்ள ECM நிர்மாணக்கம்பனியின் உரிமையாளரும் சமூக சிந்தனையாளரும் பொறியியலாளரும் சட்டமாணியுமான அல்ஹாஜ் உதுமான்கண்டு நாபீர் அவர்களது வழிகாட்டலின் கீழும் நிதியுதவியுடனும் சம்மாந்துறை ஹிஜ்ரா முச்சக்கர வண்டி சங்கத்தினருக்கு உலருணவுப் பொருட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு பொறியியலாளர் நாபீர் அவர்களது மகன் நஸீம் ஆரிப் தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வின்போது நாபீர் பௌண்டேஷனின் உயர்மட்ட உறுப்பினர்களும் மக்கள் செயற்பாட்டாளர் ஜலீல் ஜீயும் பங்கு கொண்டிருந்தனர். நாபீர் பௌண்டேஷன் பலவருட காலமாக தேவையுடைய மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்துவருவது குறிப்பிடத்தக்கது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :