ஓட்டமாவடியில் விஷேட துஆ பிராத்தனை



எஸ்.எம்.எம்.முர்ஷித்-
னாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் உயரிய சிந்தனைக்கு அமைவாக எமது நாட்டில் கொரோனா நோய் தாக்கங்கள் நீங்கப்பெற்று நாட்டு மக்கள் சுகமாகவும் சுபிட்சமாகவும் வாழும் முகமாக இறை அருள் வேண்டி சர்வமத வழிபாடுகள் இடம் பெற்று வருகின்றது.
புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்லில் இன்று சனிக்கிழமை நாடு பூராகவும் கொரோனா நோய் தாக்கம் நீங்கப்பெற்று நாட்டு மக்கள் சுகமாக வாழவேண்டி பிராத்தனைகள் இடம் பெற்றது.
இதற்கு அமைவாக ஓட்டமாவடி முஹ்யீத்தீன் பெரிய ஜூம்மா பள்ளிவாயலில் பள்ளிவாயலின் பேஷ்இமாம் மௌலவி ஏ.எல்.எம்.முஸ்தபா துஆ பிராத்தனையை நடாத்தியதுடன் பொதுஜன பெரமுன கட்சியின் மீறாவோடை கிளை சங்கத்தின் அமைப்பாளர் றபீக் ஏ. கபூர் பிரதேச மக்கள் என பலரும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :