கொத்மலை நீர்தேக்கத்தின் ஒரு பகுதி தாழிறக்கம் - அனர்த்தம் தொடர்பில் உரிய நடவடிக்கை



க.கிஷாந்தன்-
கொத்மலை நீர்தேக்கத்தின் ஊடாக செல்லும் பிரதான வீதியில் நிலம் தாழிறங்கியுள்ளது.
6 அடி ஆழத்திற்கு வீதி தாழிறங்கியுள்ளதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் கொத்மலை நீர் தேக்க அணைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

தாழிறங்கிய பகுதியை புனரமைக்கும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

புனரமைக்கப்படும் வரை நீர்தேக்கத்தின் மேல் அமைந்துள்ள வீதியில் வாகன போக்குவரத்திற்கு அனுமதியில்லை என அனர்த்த முகாமைத்துவ பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
குறித்த அனர்த்தம் தொடர்பில் பெருந்தெருக்கல் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ உரிய நடவடிக்கை எடுப்பதாக தம்மிடம் தெரிவித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இன்று (26) குழி ஏற்பட்டுள்ள பகுதியை கண்காணிக்க சென்ற ஜீவன், அங்கிருந்து அமைச்சர் ஜோன்ஸ்டனை தொலைப்பேசியில் தொடர்புக் கொண்டு நிலைமையை எடுத்து கூறியுள்ளார்.

இவ்வாறு தெளிவுப்படுத்திய போதே அமைச்சர் மேற்படி விடயத்தை தன்னிடம் கூறியதாக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

அந்த சந்தர்ப்பத்தில் டிரஸ்ட் நிறுவன பணிப்பாளர் பரத் அருள்சாமி, பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி மற்றும் இராணுவ அதிகாரி ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

எவ்வாறாயினும் இதனால் கொத்மலை நீர் தேக்க அணைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என நீர்தேக்க பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :