கிழக்கின் ஒரு தலை சிறந்த அரசியல்வாதியை நாம் இழந்துள்ளோம் என முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனரும் ,முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான ரோஹிதபோகொல்லாகம தெரிவித்துள்ளார். முன்னால் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் க. துரைரட்ணசிங்கம் அவர்களின் மறைவு குறித்து இன்று (18)விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கை நாடாளுமன்றத்தின் அன்றைய முதல் வருகையின் போது ஒன்றாக என்னுடன் பயணித்த ஒரு சிறந்த மனிதர் .இவரது ஆத்மா சாந்தியடையவும் இவரது குடும்பத்தாருக்கு உள அமைதியை பெறவும் வேண்டுகிறேன் இவரது மறைவு குறித்து கவலயடைகிறேன் ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவிக்கிறேன் இவர் தமிழ் மக்களுக்கான பிரதிநிதியல்லாமல் முழு சமூகத்துக்காகவும் ஒன்றினைந்து செயற்பட்டவர் கிழக்கு ஆளுனராக இருந்த போதும் என்னுடன் உள்ள உறவு மறக்க முடியாது கிழக்கு மக்கள் மத்தியில் சமூகம்சார் பிரச்சினை தொடர்பிலும் முன்வைத்து சிறந்த அரசியல் தலைமைத்துவத்துக்கு முன்னூதாரணமாக திகழ்ந்தவர் என்றும் தனது அனுதாபச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment