இனி தூக்க வேண்டாம்- பொலிஸாருக்கு உயர்பீடத்தில் இருந்து அறிவிப்பு!



J.f.காமிலா பேகம்-
முகக்கவசம் அணியாதவர்களைத் தேடிச்சென்று தூக்கி வாகனத்தில் ஏற்றிச் செல்வதை நிறுத்திக் கொள்ளும்படி பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன விசேட சுற்று நிருபமொன்றை வெளியிட்டு பொலிஸாருக்கு இந்தக் கட்டளையை நேற்று பிறப்பித்திருக்கின்றார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவ்வாறு நபர்களை பொலிஸார் தூக்கிச் செல்கையில் நபருக்கு தொற்று இருந்தால் பொலிஸார் இடையே தொற்று பரவும் அபாயம் இருப்பதை பொலிஸ்மா அதிபர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

கைது செய்யப்படுகின்ற நபர்கள் ஒரே ஜீப் வண்டியில் ஏற்றப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்வதிலும் கொரோனா பரவல் அச்சம் ஏற்படும் என்றும் சுற்று நிருபத்தில் கூறப்பட்டிருப்பதாக தெரியவருகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :