வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கொரோனா தொற்று அதிகரித்துக் காணப்படும் நிலையில் தொடர்ச்சியாக சுகாதாரப் பிரிவினரால் பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் இடம்பெற்று வருகின்றது.
வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மருதநகர் கிராமத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் கிராமம் முடக்கப்பட்டு காணப்படுகின்றது. இதனுடன் தொடர்புபட்டவர்களின் விபரங்கள் திரட்டப்பட்டு தொடர்ச்சியாக பி.சீ.ஆர். பரிசோதனைகள் இடம்பெற்று வருகின்றது.
அந்தவகையில் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தனிமைப்படுத்தப்பட்ட மருதநகர் கிராமத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான நபர் கடமையாற்றிய நட்சத்திர உல்லாச விடுதியில் கடமை புரியும் இருபத்தி இரண்டு நபர்களுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை பி.சீ.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி தேவராஜமுதலி ஸ்டீப் சஞ்ஜீவ் தெரிவித்தார்.
இந்த நிலையில் நட்சத்திர உல்லாச விடுதியில் கடமை புரியும் இருபத்தி இரண்டு நபர்களுக்கு பி.சீ.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு இதன் மாதிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த பி.சீ.ஆர். பரிசோதனையில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஆர்.நிதிராஜ் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment