தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் மேன்முறையீடு செய்த வாழைச்சேனை ஆயிஷா வித்தியாலய மாணவி சித்தி



எச்.எம்.எம்.பர்ஸான்-
டந்தவருடம் இடம்பெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேற்றின் படி மேன்முறையீடு செய்த வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலய மாணவி ஒருவர் சித்தியடைந்துள்ளதாக பாடசாலையின் அதிபர் எம்.ரீ.எம்.பரீட் தெரிவித்தார்.

எமது பாடசாலையில் கல்வி கற்கும் ஜெளபர் பாத்திமா நிஹா எனும் மாணவி பரீட்சை பெறுபேற்றில் 159 புள்ளிகளைப் பெற்றிருந்தார். பின்னர் இம்மாணவி பரீட்சை திணைக்களத்துக்கு மேன்முறையீடு ஒன்றினை செய்திருந்தார்.

அதைத்தொடர்ந்து, பரீட்சை திணைக்களம் பெறுபேற்றினை மீள்பரிசீலனை செய்து அனுப்பிவைத்த அறிக்கையின்படி குறித்த மாணவி 160 புள்ளிகளைப் பெற்று புலமைப்பரிசிலுக்கு தகுதி பெற்றுள்ளார் என்று தெரிவித்தார்.

இவ்வாறு சித்தியடைந்த மாணவியை செவ்வாய்க்கிழமை (4) வீடு சென்று பாராட்டி பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இதில், அதிபர் எம்.ரீ.எம்.பரீட், மாணவியின் வகுப்பாசிரியர் ஐ.சபீக், ஆசிரியர் ஏ.ஆர்.முகைதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :