கலப்பு தடுப்பூசி பயன்படுத்த வேண்டாம் – சுகாதார அமைச்சு அறிவிப்பு



J.f.காமிலா பேகம்-
லங்கையில் கொரோனா தொற்றுக்கான தடுப்பூசியை பெற்றுக் கொள்பவர்களுக்கு சுகாதார சேவைத் திணைக்களம் விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதற்கமைய முதலாவது சுற்றில் எஸ்ட்ரா செனிகா தடுப்பூசியைப் பெற்றவர்கள், இரண்டாவது சுற்றில் அதே தடுப்பூசி வகையையே பெறவேண்டும். மாறாக சைனோபார்ம் தடுப்பூசியை கொக்டைல் முறையில் பயன்படுத்தக் கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதி சுகாதார சேவைகள் ஆணையாளர் நாயகம் எஸ்.எம். ஆனல்ட் கொழும்பில் நேற்று புதன்கிழமை நடந்த ஊடக சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னதாக நடந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கின்ற ஊடக சந்திப்பின்போது, கருத்து வெளியிட்டிருந்த அமைச்சரவை இணைப் பேச்சாளராகிய உதய கம்மன்பில, கலப்பு தடுப்பூசிகளை பெற முடியும் என்பதை தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :