வாழைச்சேனை பொலிஸ் பிரிவு முடக்கிய நிலையில்!



எஸ்.எம்.எம்.முர்ஷித்-
நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை இரவு 11 மணிமுதல் பயணக்கட்டுப்பாடு அமுலுக்கு வந்துள்ளதுடன், எதிர்வரும் 25ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் 25ஆம் திகதி அதிகாலை 4 மணிமுதல் அன்றிரவு 11 மணி வரையில் நடமாட்டத்தடை தளர்த்தப்பட்டு அன்றிரவு 11 மணி முதல் 28ம் திகதி அதிகாலை 4 மணி வரையில் மீண்டும் நடைமுறைக்கு வரும் எனவும் அறிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள வாழைச்சேனை, ஓட்டமாவடி, கல்குடா பிரதேசத்திலுள்ள வியாபார நிலையங்கள் மூடிக் காணப்படுவதுடன், ஓரிரு மருந்தகங்கள் மாத்திரம் திறந்து காணப்படுகின்றது.

குறித்த பிரதேசத்தில் பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடபட்டு வருவதுடன், அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் வாகனங்கள் பயணிப்பதை காண முடிவதுடன், பிரதேசங்கள் வெறிச்சோடிக் காணப்படுகின்றது.

நகர்ப்பகுதிகளில் ஒரு சிலர் நடமாடுவதைக் காணக்கூடியதாக உள்ளதுடன், பயணத்தடை விதிக்கப்பட்டிருந்தால் நோயாளிகள் வைத்தியசாலைகளுக்குச் செல்வதற்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :