பக்தரின்றி நிறைவுபெற்ற அம்மன் குளிர்த்தி சடங்கு! ஒலி ஒளி பரப்பை கண்டு வீட்டிலிருந்து வழிபட்ட பக்தர்கள்.



வி.ரி.சகாதேவராஜா-
வரலாற்றுப்பிரசித்திபெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தின் வருடாந்த திருக்குளிர்த்திச்சடங்கு வரலாற்றில் முதல் தடவையாக பக்தர்களின் பிரசன்னமின்றி இனிதே நடைபெற்று நிறைவுற்றிருக்கிறது.

இன்று (25) செவ்வாய்க்கிழமை அதிகாலை 4மணியளவில் திருக்குளிர்த்தி பாடும் சடங்கு ஆரம்பமாகி 5.30மணியளவில் நிறைவுற்றது.

அன்ரிஜன் சோதனை செய்யப்பட்ட 10 ஆலயநிருவாகிகளுடன் இச்சடங்கு அத்தனை நாட்களிலும் நடைபெற்று வந்தன. அவர்கள் வெளியில் வராமல் ஆலயத்தினுள் தங்கியிருந்தே இதனை மேற்கொண்டிருந்தனர்.

கடந்த எட்டு நாள் சடங்குகள் அனைத்தும் வானொலி மற்றும் முகநூல் காnzhளியினுடாக ஒலி ஒளி பரப்புச்செய்யப்பட்டு வந்தன.

அதேபோல் இன்றுஅதிகாலையிலும் இவ் ஒலிஒளிபரப்பு இடம்பெற்றது. அதனை உள்நாட்டிலும் புலம்பெயர்தேசத்திலுள்ள அம்மனடியார்கள் வீட்டிலிருந்தவாறே கண்டுகளித்ததுடன் வணங்கி வழிபட்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :