சனிக்கிழமை 8.5.2021 மாலை 5.46 மணியளவில் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் எண்ணக்கருவிற்கு அமைய இலங்கை நாட்டிலுள்ள சகல மதத்தலங்களிலும் வழிபாட்டு பிரார்த்தனைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அந்தவகையில் தலவாக்கலை அருள்மிகு ஸ்ரீ கதிரேசன் ஆலயத்தில் கொரோனாவில் இருந்து நாடு விடுபட மிருத்யுஞ்சய ஹோமம் 8.5.2021 சனிக்கிழமை மாலை நடைப்பெற்றது. இந்நிகழ்வில் தேவஸ்தான குருக்கள் லங்கா தேசமானி, முத்துசாமி ஐயர், பிரசாந்த் சர்மா, ஆலய தேசிகர் விஜயகாந்த், கோயில் பரிபாலன சபையின் பொருளாளர் ரொசான் ராஜசேகர், செயலாளர் விஜேந்திரன், தலைவர் பத்மா ஆகியோர் கலந்துக்கொண்டனர். உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா தொற்றிலிருந்து விடுபட்டு சுபீட்சமானதொரு வாழ்வு மலர உலக மக்களின் நன்மைக்காகவும் இலங்கை வாழ் மக்களின் நன்மைக்காகவும் இவ்வழிபாடு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
தலவாக்கலை கதிரேசன் ஆலயத்தில் விசேட பூஜை
சனிக்கிழமை 8.5.2021 மாலை 5.46 மணியளவில் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் எண்ணக்கருவிற்கு அமைய இலங்கை நாட்டிலுள்ள சகல மதத்தலங்களிலும் வழிபாட்டு பிரார்த்தனைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அந்தவகையில் தலவாக்கலை அருள்மிகு ஸ்ரீ கதிரேசன் ஆலயத்தில் கொரோனாவில் இருந்து நாடு விடுபட மிருத்யுஞ்சய ஹோமம் 8.5.2021 சனிக்கிழமை மாலை நடைப்பெற்றது. இந்நிகழ்வில் தேவஸ்தான குருக்கள் லங்கா தேசமானி, முத்துசாமி ஐயர், பிரசாந்த் சர்மா, ஆலய தேசிகர் விஜயகாந்த், கோயில் பரிபாலன சபையின் பொருளாளர் ரொசான் ராஜசேகர், செயலாளர் விஜேந்திரன், தலைவர் பத்மா ஆகியோர் கலந்துக்கொண்டனர். உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா தொற்றிலிருந்து விடுபட்டு சுபீட்சமானதொரு வாழ்வு மலர உலக மக்களின் நன்மைக்காகவும் இலங்கை வாழ் மக்களின் நன்மைக்காகவும் இவ்வழிபாடு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment