தலவாக்கலை கதிரேசன் ஆலயத்தில் விசேட பூஜை



தலவாக்கலை பி.கேதீஸ்-
னிக்கிழமை 8.5.2021 மாலை 5.46 மணியளவில் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் எண்ணக்கருவிற்கு அமைய இலங்கை நாட்டிலுள்ள சகல மதத்தலங்களிலும் வழிபாட்டு பிரார்த்தனைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அந்தவகையில் தலவாக்கலை அருள்மிகு ஸ்ரீ கதிரேசன் ஆலயத்தில் கொரோனாவில் இருந்து நாடு விடுபட மிருத்யுஞ்சய ஹோமம் 8.5.2021 சனிக்கிழமை மாலை நடைப்பெற்றது. இந்நிகழ்வில் தேவஸ்தான குருக்கள் லங்கா தேசமானி, முத்துசாமி ஐயர், பிரசாந்த் சர்மா, ஆலய தேசிகர் விஜயகாந்த், கோயில் பரிபாலன சபையின் பொருளாளர் ரொசான் ராஜசேகர், செயலாளர் விஜேந்திரன், தலைவர் பத்மா ஆகியோர் கலந்துக்கொண்டனர். உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா தொற்றிலிருந்து விடுபட்டு சுபீட்சமானதொரு வாழ்வு மலர உலக மக்களின் நன்மைக்காகவும் இலங்கை வாழ் மக்களின் நன்மைக்காகவும் இவ்வழிபாடு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :