பயணக்கட்டுப்பாட்டை மீறி நடந்தபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை



நூருல் ஹுதா உமர்-
ல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எம்.அல் அமீன் றிசாட் அவர்களின் தலைமையில் பயணக்கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டவர்களுக்கு எதிராக கல்முனை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் மூலம் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கொவிட்-19 கொரோணா தொற்றினை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கத்தினால் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது இதனை மீறி செயற்பட்டவர்களுக்கு எதிராக கல்முனை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களுடன் இணைந்து சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது மற்றும் முகக் கவசம் அணியாமல் தனது வீட்டிற்கு முன் உரையாடி நின்றவரின் வீடும் தனிமைப்படுத்தப் பட்டது.

இறுக்கமான செயற்பாடுகள் மக்களின் நலன் கருதியே மக்களது ஒத்துழைப்பின்றி இந்த கொவிட்-19 கொரோணா வைரசினை கட்டுப்படுத்த முடியாது. 3 வது அலையில் சாய்ந்தமருதில் 3 தொற்றாளர்கள் அடையாம் காணப்பட்டனர். தற்பொழுது 2 பேர் சிகிச்சையினை பூரணமான முறையில் பெற்று வீடு திரும்பியுள்ளனர் ஒருவர் மாத்திரமே சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்."வரும் முன் காப்போம்மக்கள் சுகாதாரத் துறையினருக்கும் பாதுகாப்பு துறையினருக்கும் ஒத்துழைப்பு வழங்கி இந்த கொரோணா தொற்றை எமது பிரதேசத்தில் பூச்சிய நிலைமைக்கு கொண்டுவர ஒத்துழைப்பு வழங்குங்கள்" என சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எம்.அல் அமீன் றிசாட் மக்களை கேட்டுக்கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :