கொரோனா தடுப்பூசியை சஜித் பெற்றுக் கொள்ளாமைக்கு காரணம் இதுதான்!



J.f.காமிலா பேகம்-
திர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ இதுவரை கொரோனா தொற்றுக்கான தடுப்பூசியை செலுத்திக்கொள்ளவில்லை என தெரியவந்துள்ளது.

இதற்கான காரணமும் தற்போது வெளியாகியிருக்கின்றன.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தடுப்பூசி அளிக்கப்பட்டபோது சஜித் பிரேமதாஸ அதனைப் பெற்றுக்கொள்ளவில்லை.

எனினும் இறுதியில் அதாவது கடந்த 13ஆம் திகதிக்குப் பின் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் கொழும்பிலுள்ள இராணுவ வைத்தியசாலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

முன்னாள் சுகாதார அமைச்சராக ராஜித சேனாரத்னவின் தலையீட்டில் இந்த ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இறுதியில் பயணக்கட்டுப்பாடு காரணமாக சஜித் பிரேமதாஸவுக்குத் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியாமற் போனதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :