ஐஸ் போதைப்பொருள் கடத்திய வியாபாரி கைது



எஸ்.எம்.எம்.முர்ஷித் -
பாதணியில் மறைத்து ஐஸ் போதைப்பொருள் கடத்திய வியாபாரி ஒருவர் இன்று வியாழக்கிழமை ஏறாவூர்ப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வியாபாரியிடமிருந்து போதைப் பொருள் பக்கெற்றுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இவர் பயணம் செய்த மோட்டார் சைக்கிள் பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு கட்டுப்பாடு அமுல் செய்யப்பட்டிருந்த வேளையில் இவர் காத்தான்குடி பகுதியிலிருந்து வாழைச்சேனை நோக்கி கற்பிணியான தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த போது ஏறாவூர் மணிக்கூட்டுக் கோபுரச் சந்தியில் கடமையிலிருந்த பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது மிக நுட்பமான முறையில் பாதணியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐஸ் ரக போதைப் பொருள் பைக்கற்றுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

37 வயதுடைய ஐஸ் போதைப்பொருள் வியாபாரி நீண்டகாலமாக போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாக பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. சந்தேக நபர் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :