இலங்கை மத்திய வங்கியில் அந்நிய செலாவணி 4 பில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இந்த தொகையை வைத்து இன்றும் 04 மாதங்களுக்கே இறக்குமதிகளை செய்ய முடியும் என்று மத்திய வங்கியின் அதிகாரிகள் அரசாங்கத்திடம் தெரிவித்திருக்கின்றனர்.
சீன மத்திய வங்கி 1.5 பில்லியன் டொலர்களை வெளிநாட்டு கொடுக்கல் வாங்கலாக மாற்றிக் கொள்ள முடியும் என்ற போதிலும் அந்த தொகையை வைத்து ஒரு மாதத்திற்குத் தேவையான இறக்குமதிகளை செய்ய முடியும் என்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் சந்திரனாத் அமரசேகர தெரிவிக்கின்றார்.
இதுதவிர, இந்தியா மற்றும் பங்களாதேஷ் நாடுகளிலிருந்து வெளிநாட்டு செலாவணியை இலகுவில் பெற்றுக்கொள்ள முடியும். எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் சர்வதேச நாணய நிதியத்திலிருந்து 780 மில்லியன் டொலர்கள் கிடைக்கவிருக்கின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment