காரைதீவு பிரதேசத்தில் எழுமாறாக மேற்கொண்ட 23 பேருக்கான அண்டிஜென் பரிசோதனை : 04 பேர் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டனர்.



மாளிகைக்காடு நிருபர் - நூருல் ஹுதா உமர்-
காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் இன்று (02) எழுமாறாக மேற்கொண்ட 23 பேருக்கான அண்டிஜென் பரிசோதனையின் பெறுபேறுகளில் 04 நபர்கள் தொற்றுள்ளவராக அடையாளம் காணப்பட்டதுடன் ஏனைய அனைத்து பரிசோதனை முடிவுகளும் நெகட்டிவாக வந்துள்ளது என்று காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா வஸீர் தெரிவித்தார்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ சுகுணன் அவர்களின் வேண்டுகோளுக் கிணங்க காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்ஸீமா வஸீர் தலைமையில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர், பொது சுகாதார பரிசோதகர், அபிவிருத்தி உத்தியோகத்தர், குடும்ப நல உத்தியோகத்தர், நுளம்பு தடுப்பு பிரிவினர்கள் ஆகியோர் இணைந்து மாவடிப்பள்ளி பிரதேசத்தில் மேற்கொண்ட அண்டிஜென் பரிசோதனையில் 04 நபருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றாளராக அடையாளம் காணப்பட்டவர்கள் அரச அதிகாரி ஒருவரும் அவரின் குடும்பத்தினர்கள் மூவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :