நிந்தவூர் வைத்தியசாலைக்கு 30 லட்சம் பெறுமதியான உபகரணங்கள் பாராளமன்ற உறுப்பினர் பைசால் காசிமால் வழங்கி வைப்பு.



யாக்கூப் பஹாத்-
முன்னாள் சுகாதாரத்துறை இராஜாங்க அமைச்சரும், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான பைசால் காசிம் அவர்களின் முயற்சியின் கீழ் சுமார் 30 லட்சம் ரூபாய் பெறுமதியான 10 வகையான மருத்துவ உபகரணங்கள் இன்றையதினம் (07) நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் அமையப்பெற்றுள்ள கொரோனா தடுப்பு சிகிச்சை நிலையத்திற்கு வழங்கி வைக்கப்பட்டது.

 நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் திருமதி ஷகிலா இஸ்ஸதீன் தலைமையில் இன்று இடம்பெற்ற இந்த நிகழ்வுக்கு, கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் திட்டமிடல் பணிப்பாளர் டாக்டர் மாஹிர், நிந்தவூர் ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள், தாதியர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட சுகாதார முக்கிய அதிகாரிகள் மற்றும் நிந்தவூர் பிரதேச செயலாளர், பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோர்  கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :