கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவில் 3900 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள்



எஸ்.எம்.எம்.முர்ஷித்-
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவில் கொரோனா தொற்றினால் வாழ்வாதாரம் இழந்த வறிய மக்களுக்கு பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸ்ஸமில் வழிகாட்டலில் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவிலுள்ள வாழைச்சேனையிலுள்ள மூன்று கிராம அதிகாரி பிரிவுகள், பிறைந்துறைச்சேனையில் உள்ள இரண்டு கிராம அதிகாரி பிரிவுகள் ஆகிய ஐந்து கிராம சேவகர் பிரிவுகளுக்கும் 3900 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டது.

ஈஸ்ட் லங்கா பொலிஷக் நிறுவனத்தின் பணிப்பாளர் சபையினால் இரண்டாயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் 3900 குடும்பங்களுக்கு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் ஊடாக வழங்கி வைக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :