வருமானம்குறைந்த 8ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரணம் தேவை! திருக்கோவில் பிரதேசசெயலாளர் கஜேந்திரன் கோரிக்கை.



வி.ரி.சகாதேவராஜா-
சமகால கொரோனா பயணத்தடை காரணமாக எமது பிரிவில் வருமானம் குறைந்த சுமார் எட்டாயிரம் குடும்பங்கள் கஸ்டநிலையிலுள்ளனர். அவர்களுக்கு அரசாங்கம் 5000ருபா படிப்படியாக வழங்க ஆரம்பித்துள்ளது.அதனிடையே அந்த மக்களுக்கு சமுகசேவையாளரும் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் ஒரு தொகுதி உலருணவுப் பொதிகளை வழங்கிவைத்தமைக்கு நன்றிகளைத்தெரிவிக்கிறேன்.பொது அமைப்புகள் இந்தமக்களுக்கு உதவ முன்வரவேண்டும்.

இவ்வாறு திருக்கோவில் பிரதேசசெயலாளர் தங்கையா கஜேந்திரன் நேற்று உலருணவுப்பொதிகளை வழங்கிவைத்துரையாற்றுகையில் தெரிவித்தார்.

திருக்கோவில் பிரதேசத்திலுள்ள வினாயகபுரம் பாலக்குடா மண்டானை போன்ற கிராமங்களிலுள்ள நலிவுற்ற 200 குடும்பங்களுக்கு ஒருதொகுதி உலருணவு நிவாரணங்களை சுகாதாரநெறிமுறைக்கிணங்க அவர் வழங்கிவைத்தார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்:

சுமார் 250சதுர கிலோமீற்றர் பரப்புள்ள திருக்கோவில் பிரதேசத்திலுள்ள 10ஆயிரம் குடும்பங்களுள் 8ஆயிரம் குடும்பங்கள் வருமானம்குறைந்த கூலித்தொழில் செய்யும்வகுதியினர். 22கிராமசேவையாளர் பிரிவுகளில் வாழும் இவர்களுக்கு உதவ பொதுஅமைப்புகள் முன்வரவேண்டும் என்றார்.

பயணத்தடையால் நாளாந்த கூலித்தொழிலை இழந்து வாழ்வாதாரத்தை பூரணமாக இழந்து உண்பதற்கு எதுவுமே இல்லாத நிலையிலிருந்த இவர்களை இனங்கண்டு வழங்குவதற்கு உதவியாயிருந்த புலம்பெயர் உறவுகளுக்கும் அந்த மக்களுக்கு உதவவேண்டுமென கனிவாக வேண்டுகோள் விடுத்து எம்முடன் பயணித்து மேடுபள்ளமெல்லாம் திரிந்து உலருணவுப்பொதிகளை வழங்கிவைத்த பிரதேசயெலாளர் கஜேந்திரனுக்கும் தான் நன்றிகூறுவதாகவும் சமுகசேவையாளரும் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் அங்கு கருத்துரைத்தார்.

இந்நிகழ்வில் உதவிபிரதேசசெயலாளர் கந்தசனம் சதிசேகரன் உதவிதிட்டமிடல் அதிகாரி செல்வி எம்.அனோஜா சமுகசெயற்பாட்டாளர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோரும் கலந்துகொண்டு பொதிகளை வழங்கிவைத்தனர்.

அதேபோல் அப் பிரதேசங்களிலுள்ள வலதுகுறைந்தோருக்கும் இத்தகைய உலருணவுப்பொதிகளை தவிசாளர் ஜெயசிறில் தனது உறவுகளின் பங்களிப்புடன் வழங்கிவைத்தார்.
காரைதீவிலிருந்து தேடிவந்து இத்தகையை நெருக்கடியான காலகட்டத்தில் காலத்தில் இத்தகைய உதவியை செய்தமைக்காக தமது நன்றிகளை தெரிவிப்பதாக மக்கள் கூறினர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :