கோறளைப்பற்று மத்தியில் மூன்று நாட்களில் கொரோனா தொற்றின் ஐவர் மரணம்



எஸ்.எம்.எம்.முர்ஷித்-
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் கடந்த மூன்று நாட்களில் கொரோனா தொற்றின் காரணமாக ஐந்து பேர் மரணமடைந்துள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவித்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை வாழைச்சேனை ஆர்.டி.ஓ வீதியைச் சேர்ந்த 36 வயதுடைய கர்ப்பினி பெண் ஒருவரும், பிறைந்துறைச்சேனை அறபா வீதியை சேர்ந்த 51 வயதுடைய சிறுநீரக நோயாளி ஒருவருமாக இரண்டு பேர் மரணமடைந்தனர்.

அத்தோடு திங்கள்கிழமை ஆர்.டி.ஓ வீதியைச் சேர்ந்த 80 வயதுடைய ஒருவர் மரணமானதுடன், 74 வயதுடைய அவரது மனைவி நேற்று திங்கள்கிழமை இரவு மரணமடைந்ததுடன், வாழைச்சேனை நான்காம் வட்டாரத்தை சேர்ந்த 74 வயதுடைய ஒருவரும் மரணமடைந்த நிலையில் அவர்கள் இருவருக்கும் மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவர்கள் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொரோனா வைரஸின் மூன்றாவது அலையின் காரணமாக கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவில் இதுவரையில் ஐந்து பேர் கொரோனா தொற்றினால் மரணமடைந்துள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :