இந்தியாவில் பரவும் தொற்றால் பாதிக்கப்பட்ட மற்றுமொருவர் ஹம்பாந்தொட்டையில்!



J.f.காமிலா பேகம்-
ந்தியாவில் பரவி பாரிய அழிவை ஏற்படுத்தியுள்ள B.1.617.2 (டெல்டா) என்ற கொரோனா திரிபடைந்த தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தனிமைப்படுத்தல் முகாமில் உள்ள நபரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டிருக்கின்றார்.

இந்தியாவில் பரவும் டெல்டா திரிபடைந்த தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

குறித்த நபர் அம்பாந்தோட்டை – திஸ்ஸமஹராம பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை பிரித்தானியாவில் பரவும் B117 (எல்பா) தொற்றினால் பாதிக்கப்பட்ட பலர் இலங்கையின் பல்வேறு பிரதேசங்களில் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர்.

அதற்கமைய மட்டக்களப்பு, திருகோணமலை, குளியாப்பிட்டி, வாரியபொல, ஹபராதுவ, திஸ்ஸமஹராம, கராப்பிட்டிய, ராகம ஆகிய பிரதேசங்களில் இருந்து இவர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :