சம்மாந்துறை பொலிஸாரின் சுற்றிவளைப்பில் கசிப்பு தயாரித்தவர் சிக்கினார் : பொருட்களும் பொலிஸார் வசமானது !



நூருல் ஹுதா உமர்-
காரைதீவில் சட்டவிரோதமாக கசிப்பு காய்ச்சிய ஒருவர் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கசிப்பு காய்ச்ச பயன்படுத்திய பொருட்களும் சம்மாந்துறை பொலிஸாரால் இன்று (08) கைப்பற்றப்பட்ட சம்பவம் பதிவாகியது. பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து காரைதீவு பொலிஸ் காவலரன் பொறுப்பதிகாரியும் உப பொலிஸ் பரிசோதகருமான கே.கே. அமரானந்த தலைமையிலான பொலிஸ் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பிலையே இந்த கைது நடவடிக்கை நடைபெற்றுள்ளது.

அம்பாறை, கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் பி.எம் ஜயரட்னவின் ஆலோசனையில், சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி. எஸ். ஜெயலத்தின் வழிகாட்டலில் நடைபெற்ற இந்த சுற்றிவளைப்பில் காரைதீவு எட்டாம் பிரிவை சேர்ந்த ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கசிப்பு காய்ச்ச பயன்படுத்திய பொருட்களும் 40 கசிப்பு போத்தல்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள நபரை சம்மாந்துறை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தும் ஏற்பாடுகளை செய்துவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :