சீனாவின் மேலுமொரு கொரோனா தடுப்பூசிக்கு உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி!



ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-
லகளவில் பைசர்-பயோஎன்டெக், மாடர்னா, ஜோன்சன் & ஜோன்சன் அஸ்ட்ரா ஜெனேக்கா தடுப்பூசிகளுக்கு அவசர கால பயன்பாட்டிற்கு பயன்படுத்த முன்னர் உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி வழங்கியது. கடந்த மாதம் சீனாவின் சினோபார்ம் தடுப்பூசிக்கும் அனுமதி வழங்கியிருந்தது.

இந்நிலையில் சீனாவின் சினோவெக் கொரோனா தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்கு பயன்படுத்த உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி கொடுத்துள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் அனுமதியைப் பெறும் சீனாவின் 2வது கொரோனா தடுப்பூசி இதுவாகும். ஏற்கனவே, சீனாவின் சினோபார்ம் தடுப்பூசிக்கு உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி கொடுத்துள்ளது.

சினோவெக் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதன் மூலம், உலக நாடுகள், இந்த தடுப்பூசிக்கு விரைவாக அனுமதி அளிக்கவும் அதை இறக்குமதி செய்து விநியோகிக்கவும் கூடுதல் வாய்ப்பு கிடைத்துள்ளது.

அதேபோல், கோவெக்ஸின் தடுப்பூசி திட்டம் மூலம் இந்த தடுப்பூசியை இனி வருமானம் குறைந்த நாடுகளுக்கு வழங்க முடியும். சினோவெக் தடுப்பூசியை ஏற்கனவே, சீனாவை தவிர்த்து பிரேசில், சிலி, இந்தோனேசியா, மெக்சிகோ, தாய்லாந்து, துருக்கி ஆகிய நாடுகள் பயன்பாட்டில் வைத்துள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :