தனிமைப்படுத்தப்பட்ட வீதிகளுக்கு தடையினை போட்டு பாதுகாப்பு



எஸ்.எம்.எம்.முர்ஷித் -
ட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மிராவோடை கிழக்கு, மீராவோடை மேற்கு, மாஞ்சோலை ஆகிய கிராமங்கள் இன்று வெள்ளிக்கிழமை முதல் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மிராவோடை கிழக்கு, மீராவோடை மேற்கு, மாஞ்சோலை ஆகிய கிராமங்களில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து கடந்த புதன்கிழமை ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் தனிமைப்படுத்தும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அந்த வகையில் அதற்கான அனுமதி நேற்று மாலை வியாழக்கிழமை கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து தனிமைப்படுத்தலுக்கான நடவடிக்கைகள் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

இதில் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக ஊழியர்கள், ஓட்டமாவடி பிரதேச சபையினர், இராணுவத்தினர் மற்றும் வாழைச்சேனை பொலிஸார் இணைந்து அப்பிரதேசங்களிலுள்ள வீதிகளுக்கு தடையினை போட்டு பாதுகாப்பு பலப்பப்படுத்தப்பட்டுள்ளது.

மறு அறிவித்தல் வரை குறித்த மூன்று கிராம அதிகாரி பிரிவுகளிலும் தனிமைப்படுத்தல் அமுலில் இருக்கும் என்பதோடு பொது மக்கள் வீடுகளிளேயே இருக்குமாறும் பொதுமக்களுக்கு ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் அறிவத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :