தம்பலகாமம் புதுக்குடியிருப்பு முதியோர்களுக்கு சைனோ பாம் டோஸ் தடுப்பூசி ஏற்றி வைப்பு



ஹஸ்பர் ஏ ஹலீம்-
கொவிட்19 தடுப்பூசிகள் ஏற்றும் பணி தற்போது இடம் பெற்று வருகின்ற நிலையில் அதனை கட்டுப்படுத்தும் முகமாக பொது மக்களுக்கும் முதற்கட்டமாக முதலாவது சைனோபாம் டோஸ் ஏற்றப்படுகிறது.

திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள புதுக்குடியிருப்பு கிராம சேவகர் பிரிவில் உள்ள முதியோர்களுக்காக இன்று (08)தடுப்பூசி ஏற்றும் நிகழ்வு தம்பலகாமம் குளக்கோட்டன் பாடசாலையில் இடம் பெற்றது. தம்பலகாமம் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் மலர்விழி ரவிந்திரராஜன் தலைமையில் இடம் பெற்ற குறித்த தடுப்பூசி ஏற்றல் நிகழ்வில் புதுக் குடியிருப்பு கிராம சேவகர் பகுதியை உள்ளடக்கிய 60 வயதுக்கு மேற்பட்டோர்களுக்காக சுமார் 155 நபர்களுக்கு ஏற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு அங்குரார்ப்பண நிகழ்வு இடம் பெற்றது.
தம்பலகாமம் சுகாதார பிரிவில் புதுக்குடியிருப்பு கிராம சேவகர் பிரிவில் தெளுங்கு நகரில் அதிக கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதையடுத்து முதற்கட்டமாக உரிய கிராம பிரிவுக்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எதிர் வரும் காலங்களில் சிராஜ் நகர்,முள்ளிப்பொத்தானை,கல்மெட்டியாவ போன்ற பகுதிகளுக்கும் சைனோ பாம் டோம் ஏற்றப்படும் என சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி, உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன்,நிருவாக உத்தியோகத்தர் உடகெதர மற்றும் பாதுகாப்பு படையினர்,பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்டோர்களும் கலந்து கொண்டார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :