கொவிட் (19) தொற்றிலிருந்து பாது காக்கும் நோக்கில் சைனோ பாம் தடுப்பூசி ஏற்றல் நிகழ்வு கிண்ணியா தள வைத்தயசாலையில் இன்று(12) இடம் பெற்றது.
இந் நிகழ்வில் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.றிஸ்வி மற்றும் கிண்ணியா பிரேதச செயலாளர் எம்.எச்.முகம்மது கனி ஆகியோர் கலந்து கொண்டு தடுப்பூசி ஏற்றுவது தொடர்பாக இருவரும் விளக்கமளித்தனர்.
கிண்ணியா சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 300க்கு மேற்பட்டோர் இத் தடுப்பூசியை ஏற்றிக் கொள்வர் என தகவல் மூலம் அறிய முடிகின்றது.
இந் நிகழ்வில் பொதுச் சுகாதார பரிசோதசர்கள்,கிராம உத்தியோகத்தர்கள்,கிண்ணியா சுகாதார வைத்தியதிகாரி,கிண்ணியா பிரதேச செயலாளர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment