மல்வத்தைப்பிரதேச விதவைகளுக்கு உலருணவு நிவாரணம் !



வி.ரி.சகாதேவராஜா-
ம்பாறை மாவட்டத்தில் பின்தங்கிய மல்வத்தைப் பிரதேசத்தில் சமகால கொவிட் தாக்கத்தினாலும் பயணத்தடையினாலும் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தையிழந்த ஒரு தொகுதி விதவைகளுக்கு உலருணவு நிவாரணம் நேற்று வழங்கப்பட்டது.

தொடரும் பயணத்தடை மற்றும் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட தாயகஉறவுகளின் பசியைப்போக்க தனது பிறந்த நாள்பரிசாக 10லட்சருபாவை வழங்கியுள்ளார் ஒரு பரோபகாரி. அவர்தான் இலங்கையைச்சேர்ந்த கனடாவில் வாழ்ந்துவரும் மனோகரன் சுப்பிரமணியம் என்பார்.

குறிப்பாக அவர்வழங்கிய 1மில்லியன் ருபா(10லட்சருபா) நிதியைஅம்பாறை மாவட்டத்தைச்சேர்ந்த 500குடும்பங்களுக்கு தலா 2000ருபா வீதம் 500 உலருணவு நிவாரணப்பொதிகளை வழங்கிஉதவுமாறு மாவட்டத்தின் பிரபல சமுகசெயற்பாட்டாளரும் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறிலிடம் கேட்டுக்கொண்டிருந்தார்.

அதற்கிணங்க மல்வத்தைப் பிரதேசத்திலுள்ள மல்லிகைத்தீவு திருவள்ளுவர்புரம் கணபதிபுரம் புதுநகர் ஆகிய கிராம விதவைகளுக்கென உலருணவு நிவாரணப்பொதிகளை சமுகசேவையாளரும் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் 150 உலருணவுப் பொதிகளை நேற்று வழங்கிவைத்தார்.

நிகழ்வில் சமுகசெயற்பாட்டாளர் வி.ரி.சகாதேவராஜா கலந்துகொண்டனர்.அங்குள்ள இளைஞர்கள் ஆர்வத்துடன் இப்பணிக்கு ஒத்துழைத்தனர்.

பயனாளிகள் கருத்துரைக்கையில் கனடாவில் வதியும் மனோகரன் சுப்பிரமணியத்திற்கு நீண்டஆயுள்கிடைக்கவேண்டுமென பிறந்தநாள் வாழ்த்தும் நன்றியும் தெரிவிக்கின்றஅதேவேளை அதனை இங்கு பெற்றுத்தந்த தவிசாளர் ஜெயசிறில் ஜயாவுக்கும் நன்றிகள் என்று கூறினர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :