வாகனம் வாங்க உள்ளீர்களா? உங்களுக்கு ஓர் அதிர்ச்சித் தகவல்!



M.I.M.இர்ஷாத்-
வாகனங்களின் விலை எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்குமென இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, நாளொன்றுக்கு 15 வகை வாகனங்களின் விலை அதிகரிப்பதற்கான சந்தர்ப்பம் காணப்படுவதாக சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நிதி தளம்பல் அச்ச நிலை காரணமாக சிலர் வாகனங்களில் முதலீடு செய்ய விரும்புவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இருப்பினும் நாட்டின் தற்போதைய நிலைமை இயல்பு நிலையை அடையும் போது கொள்வனவாளர்கள் பெரும் தொகை நிதியினை இழக்க நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

அத்துடன், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாகவும் வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :