கர்ப்பிணி தாய்மார்களும் பயமில்லாமல் கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளலாம்_குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எம்.எம்.அஜீத்



ஹஸ்பர் ஏ ஹலீம்-
கொவிட்19 தடுப்பூசி சைனோபாம் முதலாவது டோஸ் ஏற்றும் நடவடிக்கை இடம் பெற்று வருகின்ற நிலையில் இன்றும்(13) ஐந்தாவது நாளாக குறிஞ்சாக் கேணி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலும் ஏற்றப்பட்டு வருகிறது.

குறித்த தடுப்பூசி ஏற்றும் பணி குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எம்.எம்.அஜீத் தலைமையில் இடம் பெற்று வருகின்றது. 60 வயதுக்கு மேற்பட்டோர்களுக்கு முதற்கட்டமாக இத் தடுப்பு மருந்து கொரோனாவில் இருந்து பாதுகாக்கும் நோக்கில் ஏற்றப்பட்டு வருகிறது.
இதன் போது ஊடகங்களுக்கு கொவிட்19 தடுப்பூசி தொடர்பில் கருத்துத் தெரிவித்த சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எம்.எம்.அஜீத்
கொரோனா தடுப்பூசி ஏற்றலில் முதலாவது நாள் மக்களின் வருகை குறைவாக இருந்தது அதனை தொடர்ந்து சமூக விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டதில் இரூந்து இது தொடர்பில் மக்கள் ஆர்வமாக உள்ளார்கள் தங்களது பகுதிக்கு 730 டோஸ்கள் வழங்கப்பட்டது இற்றை வரைக்கும் 694 டோஸ் ஏற்றப்பட்டுள்ளது.இது வரைக்கும் தடுப்பூசி பெற்றவர்கள் எந்தவித முறைப்பாடுகளையோ அல்லது பாதகமான விளைவுகள் தொடர்பிலோ எதுவும் முன்வைக்கவில்லை.எதிர் வரும் காலங்களில் கர்ப்பிணித் தாய்மார்களும் இதனை அச்சமில்லாமல் பெற்றுக் கொள்ளவும் இதய நோய்,நீரிழிவு,சர்க்கரை வியாதி எதுவாக இருப்பினும் இத் தடுப்பூசி நடவடிக்கை அவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும். மக்கள் அச்சமின்றி இதனை பெற்று கொவிட்19 நோயில் இருந்து விடுபட முடியும் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :