தபால் சேவைகள் இன்று முதல் வழமைக்கு!



J.f.காமிலா பேகம்-
தபால் நிலையங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் பொதுமக்களுக்கான மாதாந்த கொடுப்பனவு, மருந்துகள் விநியோகம் உள்ளிட்ட குறிப்பிடத்தக்களவு சேவைகளை இன்று வியாழக்கிழமை முதல் மீண்டும் செயற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அஞ்சல் தலைமையகம் தெரிவிக்கிறது.

நாட்டில் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், முதியோர் கொடுப்பனவுகளை பெற வருபவர்கள் தம்மிடமுள்ள முதியோர் அடையாள அட்டையை பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் பிரிவினருக்கு காண்பித்து தபால் நிலையங்கள் மற்றும் உப தபால் நிலையங்களுக்கு வருகை தர முடியும் என தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரட்ண தெரிவித்தார்.

சுகாதார சேவை அமைச்சு மற்றும் ஜனாதிபதி செயலணியின் வேண்டுகோளுக்கிணங்க வீடுகளிலுள்ள நோயாளர்களுக்கு அரச வைத்தியசாலை மருந்தகங்களினால் வழங்கப்படும் மருந்துகள் கொவிட் 19 இன் முதல் அலையில் விநியோகிக்கப்பட்டதைப்போலவே இன்று (03) முதல் மருந்துகள் விநியோகிக்கும் நடவடிக்கை நாடு தழுவிய ரீயிதில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :