யாழ். சுழிபுரம் மத்தி மக்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசி நாளை



யாழ் லக்சன்-
சுழிபுரம் மத்தி ஜே-173 கிராம சேவையாளர் பிரிவிலுள்ள மக்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசி ஏற்றல் நாளை செவ்வாய்க்கிழமை சுழிபுரம் ஐக்கிய சங்க சைவ வித்தியாசாலையில் இடம்பெறவுள்ளது.

கடந்த 2021.06.02 ஆம் திகதி மேற்படி வித்தியாசாலையில் முதலாம் கட்ட தடுப்பூசிகளை ஏற்றிக்கொண்ட அனைவரும் வருகைதந்து தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ளுமாறு பொதுச் சுகாதார பரிசோதகர் எஸ்.உமாசுதன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதன்போது முதலாம்கட்ட தடுப்பூசி ஏற்றலின்போது வழங்கப்பட்ட அட்டையைத் தவறாது எடுத்துவருமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாளை காலை 8.00 மணி தொடக்கம் பிற்பகல் வரை ஊசி ஏற்றும் பணி இடம்பெறும் எனவும் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி வருகைதருமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :