பயணத்தடை காரணமாக பாரிய நிதி நெருக்கடி?



J.f.காமிலா பேகம்-
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடுகள் காரணமாக, சுமார் 45 ஆயிரம் கோடி ரூபாவுக்கும் அதிக நிதி நட்டம் ஏற்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவிக்கின்றார்.

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக கடந்த மாதம் 21 ஆம் திகதி முதல் அரசாங்கத்தினால் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த கட்டுப்பாடுகள் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள பின்னணியிலேயே, அஜித் நிவாட் கப்ரால் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், நாளாந்தம் ஆயிரத்து 500 கோடி ரூபாவுக்கும் மேலதிகமதாக நட்டம் ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஊடாக, நாளாந்தம் 15 லட்சம் கோடி ரூபா கிடைக்கப் பெற்று வந்த நிலையிலேயே, தற்போது இவ்வாறான நிலைக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், இவ்வாறான நிலையில், கொரோனா தடுப்பூசிகள், மருந்துகள் மற்றும் ஏனைய மருத்துவ உபகரணங்களை கொண்டுவர வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் நாட்டில் பாரிய நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும், நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :