காரைதீவு, தம்பிலுவில் தேசிய பாடசாலைகளில் அதிபர்கள் கடமையேற்பு!



வி.ரி.சகாதேவராஜா-
காரைதீவு விபுலாநந்த மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் அதிபராக மயில்வாகனம் சுந்தரராஜன் கடமையேற்றார்.

அதேவேளை தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தின் (தேசிய பாடசாலை ) 15 வது புதிய அதிபராக பாலசுந்தரம் சந்திரேஸ்வரன் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்
இந் நிகழ்வுகள் கல்முனை வலயக்கல்விப்பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன் மற்றும் திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் வை.ஜெயச்சந்திரனின் முன்னிலையில் கொவிட் 19 சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக இடம்பெற்றன.

நிகழ்வில் முன்னாள் அதிபர்களும் கலந்து கொண்டனர்

காரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரி அதிபராகவிருந்த பாலசுந்தரம் சந்திரேஸ்வரன் (பாபு) 03 06 2021ந் திகதியில் இருந்து தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தின் (தேசிய பாடசாலை) புதிய அதிபராக நியமிக்கப்பட்டுள்ளதுடன் இவ் நியமனமானது தேசிய பாடசாலைகளுக்கு அதிபர்களை தெரிவு செய்ய நடாத்தப்பட்ட நேர்முகப் பரீட்சையில் தெரிவின் அடிப்படையில் அரசாங்க சேவை ஆணைக்குழுவின் கல்விச் சேவை குழுவின் செயலாளரின் கடிதத்தின் பிரகாரம் இவ் அதிபர் நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளமையும் அவரது இடத்திற்கு பிரதிஅதிபராகவிருந்த ம.சுந்தரராஜன் பதில் அதிபராக நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :