துவிச்சக்கர வண்டியை வைத்துவிட்டு மோட்டார் சைக்கிளை திருடிச் சென்ற நபர்! வாழைச்சேனை அல்லாப் பிச்சை வீதியில் சம்பவம்



எச்.எம்.எம்.பர்ஸான்-
துவிச்சக்கர வண்டி ஒன்றில் வந்த நபரொருவர் துவிச்சக்கர வண்டியை வைத்துவிட்டு மோட்டார் சைக்கிளை திருடிச் சென்ற சம்பவமொன்று நேற்றிரவு ((14) இடம்பெற்றுள்ளது.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்லாப் பிச்சை வீதியில் வைத்தே இத் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வாழைச்சேனையைச் சேர்ந்த நபரொருவரின் EP –BCV 8533 எனும் இலக்கமுடைய கறுப்புநிற பல்சர் மோட்டார் சைக்கிளே திருடப்பட்டுள்ளது.

குறித்த துவிச்சக்கர வண்டி கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இந்தச் சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :