காரைதீவில் முதலாவது கொரோனா மரணம்!



வி.ரி.சகாதேவராஜா-
ல்முனைப்பிராந்தியத்திலுள்ள காரைதீவு சுகாதாரவைத்திய அதிகாரி பிரிவில் முதலாவது மரணம் நேற்றுமுன்தினம் (12)சனிக்கிழமை அதிகாலை சம்பவித்துள்ளது.
காரைதீவு.4 ஜச் சேர்ந்த விநாயகமூர்த்தி சத்தியசீலன் என்பவரே இவ்விதம் கொரோனாவினால் உயிரிழந்துள்ளார்.

53வயதுடைய குடும்பஸ்தரான இவர் கடந்த 4ஆம் திகதி மட்டக்களப்பு பொது வைத்தியசாலைக்கு சிகிச்சை நிமித்தம் சென்றபோது மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் சோதனையின்போது தொற்றாளராக இனங்காணப்பட்டதையடுத்து கரடியனாறு கொவிட் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

அங்கு இருந்தவேளை நேற்றுமுன்தினம் மரணமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் காரைதீவு பிரதேச சபைஊழியர் விநாயகமூர்த்தி சுரேந்திரன் கடந்த (10) அதிகாலை 2.00 மணியளவில் கொரோனாவின் கொடும்பிடியில் சிக்கி உயிரிழந்துள்ளார். இவர் காரைதீவில் பிறந்து அட்டப்பள்ளத்தில் திருமணம் செய்து அங்கு வாழ்ந்துவந்தவராவார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :