அவுஸ்ரேலியாவை தளமாகக் கொண்டு இயங்கும் தொண்டு நிறுவனமான வன்னி ஹோப் அவுஸ்ரேலியா நிறுவனத்தின் நிதி அனுசரணையில் திருகோணமலை மக்கள் சேவை மன்றத்தினால் பெண்களுக்கான சுகாதார பாதுகாப்பு தொகுதிகள் இரண்டாம் கட்டமாக கிண்ணியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இப் பொதிகள் கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனி அவர்களிடம் மக்கள் சேவை மன்றத்தின் தலைவர் எம். ரீ. எம். பாாிசினால் பிரதேச செயலகத்தில் வைத்து இன்று(14)வழங்கி வைக்கப்பட்டது.
கிண்ணியாப் பிரதேசத்தில் கோவிட்-19 காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்களில் உள்ள பெண்களின் சுகாதார தேவையை நிவர்த்தி செய்யும் நோக்குடன் மக்ள் சேவை மன்றத்தினால் 500 பெண்களுக்கான சுகாதாரப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டு அவை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஊடாகப் பகிர்ந்தளிக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் கிண்ணியா பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எம். எஸ். றியாத், பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் பீ. நிஜாம்தீன், திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை உபதவிசாளர் ஏ. எல்.எம் நௌபர், கின் டீவி இயக்குநர் நளிஜ் அப்துல் சலாம் அதன் முகாமையாளர் எம். சப்ரி, மக்கள் சேவை மன்றத்தின் திட்ட உத்தியோகத்தர் ஆர். கிரிஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
வன்னி ஹோப் அவுஸ்ரேலிய நிறுவனத்தின் அசவரகால நிவாரணத் திட்டத்தின் வழங்கப்பட்ட இந்த நிகழ்வுக்கு கின் டீவி ஊடக அனுசரணை வழங்கியது குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment