எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இன்று(13) ஞாயிற்றுக்கிழமை விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளார்.
எரிபொருள் விலை அதிகரிப்பு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவர் இந்த விசேட அறிவிப்பை மேற்கொள்ள உள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, கொரோனா தொற்றினால் நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடி மற்றும் மக்கள் எதிர்கொண்டுள்ள நிலைமைக்கு மத்தியில் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில எரிபொருள் விலைகளை அதிகரிப்பதற்கு எடுத்த முடிவிற்கு எதிராக கடும் எதிர்ப்புகள் வெளியாகியுள்ளன.
விசேடமாக அவர் பிரத்தினித்துவம் வகிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச்செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் இதுகுறித்து அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார்.
மக்கள் நெருக்கடியில் உள்ள நிலையில் எரிபொருள் விலைகளை அதிகரிக்க அமைச்சர் எடுத்த முடிவை வாபஸ் பெற வேண்டும். இல்லாவிட்டால் அவர் இராஜினாமா செய்ய வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment