காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் போது, காரைதீவு பிரதேசத்தைச் சேர்ந்த 06 பேருக்கு கொவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் டாக்டர் தஸ்ஸீமா வசீரின் ஏற்பாட்டில், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட பிசிஆர் சோதனை நடவடிக்கை காரைதீவு மாவடிப்பள்ளி மாளிகைக்காடு பகுதிகளில் இடம்பெற்றது.
இதன்போது ஆறுபேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டதென தலைமை பொதுச்சுகாதார பிரிசோதகர் சா.வேல்முருகு தெரிவித்தார்.
இவ்வாரம் மரணித்த ஒருவரின் குடும்பத்தினரும், மற்றுமொரு கிராமசேவை உத்தியோகத்தரும் தொற்றுக்கிலக்காகி பாலமுனை மருதமுனை இடைத்தங்கல் கொவிட் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
காரைதீவு பிரதேசத்தில் இதுவரை 154பேர் தொற்றுக்கிலக்காகியுள்ளதாகவும், 134பேர் குணமாகி வீடுவந்துள்ளதாகவும் ,18பேர் தற்போது சிகிச்சை பெற்றுவருதும், இதுவரை இருவர் மரணித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment