திருகோணமலை மாவட்டத்தின் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மாடு மேய்க்கச் சென்ற நபயொருவரை காட்டு யானை தாக்கியதில் உயிரிழப்பு.



எப்.முபாரக்-
திருகோணமலை மாவட்டத்தின் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மாடு மேய்க்கச் சென்ற நபயொருவரை காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளதாக சூரியபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் இன்று(11) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவத்தில் வான்எல,கந்தளாய் பகுதியைச் சேர்ந்த கே.குலதூங்க வயது(63) என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தனது மகனுடன் வீட்டிலிருந்து துவிச்சக்கர வண்டியில் மாடு மேய்க்க சென்ற போதே மறைந்திருந்து காட்டு யானை தாக்கியதில் தந்தை ஸ்தலத்திலே உயிரிழந்துள்ளதாகவும்,யானைத் தாக்குதலுக்குள்ளான மகன் கந்தளாய் தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சடலம் கந்தளாய் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :