கிழக்கு மாகாணத்தில் கோவிட் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை!



கிழக்கு மாகாணத்தில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 8ஆம் திகதி முதல் கோவிட் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகக் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.ஆர்.எம்.தௌபீக் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் கோவிட்டின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டு வருகின்ற இன்றைய காலகட்டத்தில் பொதுமக்களுக்கான தடுப்பூசி எப்போது செலுத்தப்படும் என்று கேட்டபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

குறித்த கோவிட் தடுப்பு ஊசிகள் எதிர்வரும் திங்கட்கிழமை எமக்கு கிடைக்க உள்ளது. கிழக்கு மாகாணத்திற்கு எவ்வளவு தொகை என்பது இதுவரை சொல்லப்படவில்லை.

எனினும் எதிர்வரும் எட்டாம் திகதி செவ்வாய்க்கிழமை தடுப்பூசி செலுத்தும் பணி ஆரம்பிக்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேவேளை கிழக்கு மாகாணத்தில் அதிகமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளாகத் திருகோணமலை மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய பிரதேசங்கள் காணப்படுகின்றன.

இருந்தபோதிலும் திருகோணமலை மாவட்டத்தில் அதிகூடிய உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளதாகவும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

கிழக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட முதல் மூன்று பிரதேசங்களுக்கும் தடுப்பூசி வழங்கும் திட்டத்தை அமுல்படுத்துவதற்கும், அடுத்த கட்டமாக கல்முனைப் பிராந்தியத்தில் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அரச ஊழியர்கள், கர்ப்பிணிகள், முன்னணி செயற்பாட்டாளர்கள் போன்றோருக்கும் இத் தடுப்பூசியை வழங்க உத்தேசித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :