கொரோனா தொற்று அறிகுறிகள் தென்பட்டால் அச்சம் கொள்ளாமல் தங்களது உயிர்களைப் பாதுகாக்க முன்வாருங்கள் என்று கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை உப தவிசாளர் யூ.எல்.அஹமட் லெப்பை தெரிவித்தார்.
கொரோனா அறிகுறிகளுடன் பலர் நீண்ட நாட்களாக வீடுகளில் இருந்து விட்டு கடைசி நேரத்தில் வைத்தியசாலைக்கு செல்வதாக வைத்தியர்கள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது. அவ்வாறு செல்வதனூடாக பலர் உயிர்களை இழக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
எனவே, கொரோனா என்றதும் அச்சம் கொள்ளாமல் தைரியமாக சென்று தங்களுக்கான சிகிச்சைகளை பெற்றுக் கொள்ளுங்கள்.
தனக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை முடிந்து வீடு சென்றுள்ளேன். தனது ஆரோக்கியத்துக்காக பிரார்த்தனை செய்த மற்றும் தொலைபேசிமூலம் ஆறுதல் கூறிய உறவுகள் அனைவருக்கும் தனது இதயபூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று உப தவிசாளர் யூ.எல்.அஹமட் லெப்பை தெரிவித்தார்.
0 comments :
Post a Comment