குவைத் நிதியில் அல் - நஜாத் அறக்கொடையினால் அட்டாளைச்சேனையில் வீடு கையளிப்பு !



நூருல் ஹுதா உமர்-
குவைத் நாட்டின் அல் - நஜாத் அறக்கொடை நிறுவனத்தின் நிதியுதவியுடன் இலங்கையிலுள்ள அந் - நூர் சரிட்டி சமூக சேவை நிறுவனத்தின் அனுசரணையுடன் வறுமை கோட்டின் கீழ் வாழும் குடும்பம் ஒன்றுக்கு கட்டி முடிக்கப்பட்ட சுமார் ஐந்தரை லட்சம் ரூபாய் பெருமதியுடைய வீடொன்று அட்டாளைச்சேனையில் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை அந் - நூர் சரிட்டி நிறுவனத்தின் தவிசாளர் எஸ்.எம். அலியார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கை சமாதான கற்கைகளுக்கான நிலையத்தின் பணிப்பாளர் பேராசிரியர் எஸ்.எல். றியாஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டு வீட்டிற்கான நினைவுக்கல்லை திறந்து வைத்து உரிய குடும்பத்தினரிடம் உத்தியோகபூர்வமாக இவ்வீடு கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் இவ் அமைப்பின் முக்கியஸ்தர்கள் , அட்டாளைச்சேனை பிரதேச இணைப்பாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர் .
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :