புலம்பெயர் தொழிலாளர்களை சமூக பொருளாதார ரீதியாக மீள்ஒருங்கிணைப்புச் செய்தல் தொடர்பில் யாழில் கலந்துரையாடல்.



யாழ் லக்சன்-
IOM,ILO நிறுவனத்தினர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு இணைந்து COVID -19 தாக்கம் காரணமாக நாடு திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்களை சமூக பொருளாதார ரீதியாக மீள்ஒருங்கிணைப்புச் செய்வதற்கான அறிமுகக் கூட்டம் இன்று காலை 11.30 க்கு மாவட்டச் செயலாளர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் திணைக்கள தலைவர்கள்,பிரதேச செயலாளர்கள் அரசசார்பற்ற நிறுவனங்களின் தலைவர்களும் MS Teams செயலி ஊடாக இணைந்து கொண்டு COVID -19 தாக்கம் காரணமாக நாடு திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்களின் சமூக பொருளாதார நலன்களை முன்னேற்றுவதற்காக மேற்கொள்ளப்படவிருக்கும் செயற்பாடுகள் மற்றும் அவர்கள் எதிர்கொண்டுள்ள சவால்கள் தொடர்பாக கலந்துரையாடினர்.

இக்கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்,மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்டச் செயலாளர், அனர்த்த முகாமைத்துவ பிரிவு உதவிப்பணிப்பாளர், அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள்,மற்றும் மாவட்ட செயலக துறைசார் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :