டெங்கை கட்டுப்படுத்த காரைதீவு, சாய்ந்தமருது பிரதேசத்தில் நடவடிக்கை !



நூருல் ஹுதா உமர்-
டெங்கு நுளம்பை கட்டுப்படுத்தும் முகமாக புகை விசிறல் செயற்பாடுகள் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா வஸீரின் வேண்டுகோளுக்கிணங்க காரைதீவு பிரதேசத்திலும் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எம்.அல் அமீன் றிசாடின் வேண்டுகோளுக்கிணங்க மூடப்பட்டிருக்கும் பள்ளிவாசல்களில் சுற்றுப்புறச் சூழல் நிலமைகள் பற்றி ஆராயும் கள விஜயத்தினை கள நுளம்பு ஒழிப்பு உதவியாளர்கள் மேற்கொண்டனர்.

இந்த கால கட்டத்தில் அதிகமான டெங்கு நோய் பரவக் கூடிய சாத்தியம் அதிகமாக இருப்பதனால் பொதுமக்கள் தங்களின் சுற்றுப்புற சூழல்களை நாளுக்கு நாள் சுத்தமாக்கி கொள்ளுமாறும் தினமும் காலையில் குறைந்தது 10 நிமிடங்கள் சுற்றுச்சூழலை பரிசோதித்து நுளம்பு பெருகும் இடங்களை அகற்றி டெங்கு நோயிலிருந்து இருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு பொதுமக்களை சுகாதார வைத்திய அதிகாரிகள் கேட்டுக்கொள்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :